தமிழீழ தேசிய மாவீரர் நாள் டென்மார்க்

27/11/2017 திங்களன்று டென்மார்க் Holbæk நகரில் kultur kaserneவில் மதியம் 12:30 மணிக்கு மண்டபம் நிறைந்த தாயக உணர்வாளர்களின் உணர்வெழுச்சியுடன் தாயக மண்ணின் விடியலுக்காய் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர் செல்வங்களை நினைவிலேந்தி வணங்கும் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வு மதியம் 12:30 மணிக்கு ஆரம்பமாகி வழமையான கொடி வணக்கம், அகவணக்கம், சுடர் வணக்கம் மற்றும் மலர் வணக்கத்துடன் தாயக எழுச்சிகானங்களும் எழுச்சி நடனங்களும் இடம்பெற்று பின்னர் சிறப்புரையும் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலிசையுடன் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்