சிறிலங்கா அதிபருக்கு சியோல் பெருநகரத்தின் கௌரவ குடியுரிமை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, தென்கொரியாவின், சியோல் பெருநகர அரசாங்கம், கௌரவ குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளது.

தென்கொரியாவுக்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு சியோல் பெருநகர அரசாங்கத்தின் முதல்வர், இன்று கௌரவ குடியுரிமையை வழங்கினார்.

இருநாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவின் அடையாளமாகவே சிறிலங்கா அதிபருக்கு இந்த கௌரவ குடியுரிமையை வழங்கியதாக சியோல் பெருநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்