பொதுசின்னம் தொடர்பில் இணக்கம் காணப்படவில்லை

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகளில் இன்னும் இணக்கப்பாடொன்று எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பொதுவான கூட்டணி ஒன்றில் போட்டியிடும் போது, பொதுசின்னம் தொடர்பில் இன்னும் இணக்கம் காணப்படவில்லை.
இதுதொடர்பில் கடந்த தினம் ஈபிஆர்எல்.எஃப் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரனுக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர பொன்னம்பலத்துக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சின்னமான மிதிவண்டி சின்னத்திலேயே தங்களுக்கு இடையிலான கூட்டணி போட்டியிட வேண்டும் என்று, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பில் சுரேஷ் பிரேமசந்திரனை வினவியபோது, இந்த பேச்சுவார்த்தைகள் எவையும் இன்னும் நிறைவடையவில்லை என்றும், நிறைவடைந்தப் பின்னரே அது குறித்த விபரங்களை வழங்க முடியும் என்றும் கூறினார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்