சம்பந்தன் போன்று அடிப்பணிந்துப்போகும் ஒரு எதிர்க்கட்சித் தலைவரை வரலாற்றில் கண்டதில்லை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் போன்று அரசாங்கத்திற்கு அடிப்பணிந்துப்போகும் ஒரு எதிர்க்கட்சித் தலைவரை வரலாற்றில் கண்டதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய வெளிச்சம் அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பின் அருண் தம்பிமுத்து இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “60 வருடகாலமாக தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்காகப் போராடிவருவதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசியல் தீர்வுக்காக இளைஞர்களின் எதிர்காலத்தையும் தியாகம் செய்ய தயாராகவுள்ளதாக கூறியுள்ளார். 60 வருட போராட்டத்தின் மூலம் தமிழ் இளைஞர்களின் எதிர்காலத்தை இவர்கள் அழித்துள்ளனர்.

இந்நிலையில், வரலாற்றில் இரா.சம்பந்தன் போன்று அரசுக்கு அடிப்பணிந்து செயற்படும் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இருந்திருக்கவில்லை” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்