ஜெ.தீபாவின் வேட்புமனு நிராகரிப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுசாமியால் மேற்படி வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுவில் படிவம் 26 ஐ முழுமையாக நிரப்பாத காரணத்தினால் தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக வேட்புமனுவில் சொத்துக்கள் மற்றும் வங்கிக்கணக்குகள் தொடர்பான முறையான தகவல்கள் பூர்த்திசெய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

எதிர்வரும் 21 ஆம் திகதி நடத்தப்படவுள்ள ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஜெ.தீபா நேற்றையதினம் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்