தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ரெலோ விலகியதாக சிறிகாந்தா அறிவிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ரெலோ போட்டியிடாது என்று அந்த கட்சியின் தலைமைத்துவக் குழுக் கூட்டத்தில் இன்று அதிகாலை முடிவெடுக்கப்பட்டதாக கட்சியின் செயலர் சிறிகாந்தா ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் நேற்றைய கூட்டத்தில் தமிழரசுக் கட்சியால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அடுத்த கட்டம் குறித்து ரெலோ முக்கிய பிரமுகர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த கட்சியின் தலைமைத்துவக் குழு கூட்டம் நேற்று இரவு 10 மணிக்கு வவுனியாவில் ஆரம்பமாகியது. 16 பேர் பங்கேற்ற இந்த கூட்டம் அதிகாலை 1.30 மணிவரை நீடித்திருந்தது.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ரெலோ போட்டியிடாது என்று முடிவெடுத்துள்ளோம். இது குறித்த அறிவிப்பை இன்று மாலை உத்தியோக பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் சிறிகாந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

ஈழதேசம் இணையம்!

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்