மைத்திரி – மகிந்த சந்தித்துக்கொண்டனர்

சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் இன்று வியாழக்கிழமை ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டுள்ளனர்.

அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் மகன் பஷத யாப்பா அபேவர்தனவின் திருமண நிகழ்வின் போதே இருவரும் சந்தித்துக்கொண்டுள்ளனர்.
மைத்திரிபால சிறிசேனவும் மற்றும் மகிந்த ராஜபக்‌ஷவும் மணமக்கள் சார்பாக சாட்சி கையெழுத்திட்டதுடன் இதன்போது இருவரும் சுமுகமாக கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்