முகமாலையில் இன்று காணி விடுவிப்பு!

கிளிநொச்சி – பளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியின் ஒரு பகுதி இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் வேளையில் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

முகமாலைப் பகுதியில் தற்போது மிதிவெடிகள் படிப்படியாக அகற்றப்பட்டு மீள்குடியேற்றத்துக்கு மக்களிடம் காணிகள் கையளிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இன்றைய தினம் முகமாலை பகுதியில் ஒரு பகுதி காணி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது என பளைப் பிரதேச செயலாளர் பரமோதயன் ஜெயராணி தெரிவித்துள்ளார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்