தலைமையை தருகிறேன் – மறைமுகமாக கஜேந்திரகுமாருக்கு அழைப்பு விடுக்கும் ஆனந்த சங்கரி

மாறுபட்ட அணியில் நின்று தேர்தல் கேட்கின்றவர்கள் ஒன்றாக இணைந்து வந்தால் கட்சித் தலைமையையும் விட்டுக்கொடுக்கத் தான் தயார் என தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள். எனவே அவர்களின் விருப்பத்திற்கு அமைவாக எல்லோரும் ஒற்றுமையாக வரவேண்டும் எனவும் அவர் கூறினார்.

கிளிநொச்சியில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இந்த முறை தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கடவுள்தான் சொல்ல வேண்டும்.

இன்றும் காலங்கடந்து விடவில்லை. மாறுபட்டு தேர்தல் கேட்கின்றவர்கள் ஒன்றாக வந்தால் நான் தலைமையையும் விட்டுக்கொடுக்கத் தயார். தெரியாத ஊருக்கு பாதை காட்டுவதனை விடுத்து தெரிந்த ஊருக்கு பாதை காட்டுவோம் எல்லோரும் வாருங்கள் எனவும் தெரிவித்தார்

About காண்டீபன்

மறுமொழி இடவும்