மட்டக்களப்பு வாழைச்சேனையில் ஆணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பகுதியில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது.

ஆண் ஒருவரின் சடலமே கும்புறுமூலை வெம்பு காட்டுப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை கண்டெடுத்ததாகத் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்