இடி தாங்கி, வெளிச்சவீடு அமைத்துத் தரக்கோரி மனு!!

பாசை­யூர் கடற் பகு­தி­யில் இடி தாங்கி, வெளிச்­ச­வீடு அமைத்­துத் தர வேண்டும் என யாழ் மாவட்­டக் கடற்­றொ­ழி­லா­ளர் சம்­மேள­னம் கடற்­றொ­ழில் அமைச்­ச­ருக்கு நேற்று மனு அனுப்­பி­யது.அந்த மனு­வில் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது;

யாழ் மாவட்ட மீன­வர்­க­ளில் சிலர் தற்­போது ஆழ்­க­டல் மீன்­பி­டி­யில் ஈடு­பட்டு வரு­கின்­றார்­கள். தற்­போ­துள்ள கடற்­றொ­ழில் திணைக்­க­ளத் தின் சுற்­று­நி­ரு­பத்­தின்­படி 45 அடிக்­கு குறை­வான பட­கு­களை உற்­பத்தி செய்ய முடி­யா­துள்­ளது. எனவே போரி­னால் மிக­வும் பாதிக்­கப்­பட்ட யாழ் மாவட்ட மீன­வர்­கள் கோரு­வது போல 36 அடிக்கு மேற்­பட்ட பட­கு­கள் உற்­பத்தி செய்­வ­தற்கு சிறப்பு அனு­மதி வழங்­க­வும்.

2018 ஆம் ஆண்டு வரவு செல­வுத்­திட்­டத்­தில் 55 நீள­மான பட­கு­க­ளுக்கு 50 வீத மானி­யம் வழங்­கப்­பட்­டது. எனவே மீன­வர்­க­ளுக்கு 36 அடிக்­கு மேற்­பட்ட பட­கு­க­ளுக்கு இந்த மானிய உதவி வழங்­க­ வேண்­டும் குரு­ந­கர் மற்­றும் தீவுப்­ப­கு­தி­யைச் சேர்ந்த மீன­வர்­கள் பாரம்­ப­ரி­ய­மாக சுழி­யோ­டு­வ­தன் மூல­மாக கட­லட்டை, சங்கு என்­ப­ன­வற்றை பிடித்­து­வ­ரு­ கின்­ற­னர்.

தற்­போது வெளி­மா­வட்ட மீன­வர்­கள் செயற்கை வாயுவுடன் சுழி­யோ­டு­வ­தன் மூல­மாக இந்த வளங்­கள் மிக விரை­வாக அழி­வ­டைய வாய்ப்­பு உள்­ளது. யாழ் கட­லேரி பகு­தி­யி­லும் மற்­றும் கிளி­நொச்சி மாவத்­தி­லும் செயற்கை வாயு­வைப் பயன்­ப­டுத்தி சழி­யோ­டு­வதை முற்­றாக நிறுத்த வேண்­டும்­எ­ன­வும் இந்­தப் பகு­தி­யில் பாரம்­ப­ரி­ய­மாக சுழி­யோ­டு­ ப­வர்­க­ளுக்கு அனு­மதி வழங்­க­ வேண்டும் எனவும் கோரு­கின்றோம்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்