தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு!

ஜனநாயக போராளிகள் கட்சி தமிழரசுக் கட்சியின் ஆசன ஒதுக்கீடு ஊடாக இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதாக தமிழரசுக் கட்சியின் இணை செயலாளரும் , வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போது தமிழரசு கட்சி , ரெலோ மற்றும் புளேட் ஆகிய கட்சிகளே தற்போது பங்காளி கட்சிகளாக உள்ளன. இந்த நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் , தமிழரசு கட்சியின் ஆசன ஒதுக்கீட்டில் ஜனநாயக போராளிகள் கட்சியை சார்ந்தவர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்