பிலிப்பைன்சில் நிலச்சரிவில் சிக்கி 133 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்சின் தென்பகுதியை தாக்கிய புயலால் ஏற்பட்ட கனமழை , வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 133 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் தாக்கிய தாக்கிய டெம்பின் என பெயரிடப்பட்ட புயல் மிண்டானாவ் தீவில் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது.

மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றுடன் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன காரணமாக தாழ்வான பகுதியில் குடியிருந்த சுமார் 12 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் பிலிப்பைன்சினைத் தாக்கிய மற்றொரு புயல் காரணமாக 46 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்