மனித உரிமைச் செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நாவில் உறுதியளித்த தீர்மானங்களை இலங்கை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சுமூகமான வாழ்க்கைக்குத் தேவையான ஆணையையே இலங்கை மக்கள் வழங்கியுள்ளனர். தகவல் அறியும் சட்டமூலம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசு ஏற்படுத்துவதாகக் கூறிய மனித உரிமை செயற்பாடுகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசு சடுதியான முன்னேற்றப் பாதையை நோக்கி நகரவேண்டும் – என்று குறிப்பிட்டுள்ளார்.