தேசிய ரீதியில் சாதனைகள் படைத்த வட மாகாணத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் வர்ண இரவுகள் 2017 நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்த வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு பதக்கங்களை அணிவித்து கௌரவித்துள்ளார்.
வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் சார்பில் நடாத்தப்பட்ட எட்டாவது வர்ண இரவுகள் 2017 நிகழ்வு கடந்த 23.12.2017 அன்று சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்த வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அன்நதி சசிதரன் அவர்கள் தேசிய மட்ட குழு விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டிய அணி வீரர்களுக்கும் பயிற்றுவிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோருக்கும் பதக்கங்களை அணிவித்து சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசில்களை வழங்கியும் கௌரவித்துள்ளார்.
வட மாகாண கல்வி அமைச்சின் அனுசரனயுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ வட மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், கௌரவ வட மாகாண சபை உறுப்பினர் ம.க.சிவாஜிலிங்கம், வட மாகாண விளையாட்டுத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயிற்றுவிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.