2017ஆம் ஆண்டில் வடமாகாணத்திற்கு வழங்கப்பட்ட நிதி, நூறு வீதம் முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது- முதலமைச்சர்

2017ஆம் ஆண்டில் வடமாகாணத்திற்கு வழங்கப்பட்ட நிதி, நூறு வீதம் முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.ஒதுக்கப்பட்ட நிதியில் 614.28 மில்லியன் ரூபா, மத்திய திறைசேரியினால் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடமாகாண அபிவிருத்திப் பணிகளுக்காக, 6013.48 மில்லியன் ரூபா கடந்த வருடம் ஒதுக்கப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.இதில், கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதி வரை மத்திய திறைசேரியினால், 5399.20 மில்லியன் ரூபா மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது.
இது மொத்த நிதி ஒதுக்கீட்டின் 90 வீதமாகும் என வடமாகாண முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், கிடைக்கப் பெற்ற நிதி, அமைச்சுக்கள் திணைக்களங்களினூடாக நூறு வீதம் முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்த ஒதுக்கீட்டில் அனுமதிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் 97 சதவீதமான பௌதீக முன்னேற்றம் அடையப் பெற்றுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்