யாழில் ஐந்துபிள்ளைகளுடன் தாய் ஒருவரைக் காணவில்லை என முறைப்பாடு!

யாழ்ப்பாணத்தில் 05 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ். நல்லூர் அரசடி வீதிப் பகுதியைச் சேர்ந்த 36 வயதான பிரதீபன் திவானி என்பவரே குழந்தைகளுடன் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாயாருடன் 11 வயதான பவநிதன் 9 வயதான அருள்நிதன் வயது 8 வயதான இரட்டைக் குழந்தைகளான யதுசியா, யஸ்ரிகா மற்றும் வயது 2 வயதான குழந்தை ஆகியோரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர்களைக் காணவில்லையென கடந்த 09ம் திகதி யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடும்ப தகராறு காரணமாகவே, தாயார் தனது 5 பிள்ளைகளுடன் காணாமல் போயுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் காவல்துறையினர் இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்