மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் 20 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் இரா. அசோக் என்னும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரின் அலுவலகம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அலுவலகத்தின் மேற்பகுதியில் இருந்த குறித்த வேட்பாளரின் பதாகை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்