யாழில் மீண்டும் வாள்வெட்டு வன்முறை! இருவர் படுகாயம் அடைந்தனர்!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுச் சம்பவங்களினால் மக்கள் மத்தியில் அச்ச நிலை தலைதூக்கியுள்ளது.
இன்று இரவு இடம்பெற்ற இருவேறு வாள்வெட்டுச் சம்பவங்களில் படுகாயம் அடைந்த இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.ஆனைக்கோட்டை வராகி அம்மன் கோவில் அருகிலும், பூநாரி மடம் பகுதியிலும் இன்று (15) இரவு இந்த வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் கந்தையா திருநீலகண்டசிவம் (வயது 49) மற்றும் நாகமணி ஜெனிஸ்ரன் (வயது 24) ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பாகவும், மானிப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்