கிராமங்களை அபிவிருத்தி செய்ய பொருத்தமானவரை தெரிவு செய்யுங்கள் வேலணையில் விஜயகாந் தெரிவிப்பு

நடக்கவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தல் தனி நாட்டையோ தனி ஈழத்தையோ பெற்றுத்தரப் போவதில்லை. இது கிராமங்களிற்கான தேர்தல் கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கான தேர்தல். இவ்வாறு தெரிவித்தார் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எஸ்.விஜயகாந்.

தமிழர் விடுதலை கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தலமையில் வேலணை துறையூரில் 2018.01.17 அன்று பி.ப 03.00 மணியளவில் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உள்ளுராட்சித் தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணைந்து போட்டியிடவுள்ள முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எஸ்.விஜயகாந் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு.

நடக்கவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தல் கிராமங்களிற்கான தேர்தல். கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கான தேர்தல்.

பல்வேறு கட்சிகள் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி கபடத்தனமான முறையில் மக்களின் பெறுமதியான வாக்குகளைச் சூறையாடி வருகின்றனர்.

காலங்காலமாக இதுவே நடைமுறையில் இருந்து வருகின்றது. இது கட்சிகளிற்கான தேர்தல் இல்லை போலியான வாக்குறுதிகளை வழங்கும் கட்சிகளிற்கு உங்கள் பொன்னான வாக்குகளைப் போட்டு உங்கள் கிராமங்களை மேலும் பின்னடையும் நிலைக்கு இட்டுச் செல்லாதீர்கள்.

எனவே உங்கள் கிராமங்களில் அக்கறை கொள்ளுங்கள் – உங்கள் கிராம அபிவிருத்தியில் அக்கறை கொள்ளுங்கள் – உங்கள் கிராம மக்களின் நலனில் அக்கறை கொள்ளுங்கள் அதற்கு ஏற்றாற் போல் பொருத்தமான – துடிப்பு மிக்க – செயற்திறன் மிக்க – இளைய தலைமுறையை தெரிவு செய்யுங்கள். இதுவே நீங்கள் பிறந்த வாழும் கிராமத்திற்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடனாகும்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்