முடிவுக்கு வருகிறதா இந்திய- இலங்கை ஒப்பந்தம்? – சிவாஜிலிங்கம் கேள்வி

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் முடிவிற்கு வருகின்றதா என்பதை இந்திய அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்திய துாதுவரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்