ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் ஆளுநர்கள் பங்கேற்பு பழ.நெடுமாறன் கடும் கண்டனம்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
கல்கத்தாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்துகிற கலந்தாய்வு கூட்டத்தில் மேற்கு வங்க மற்றும் திரிபுரா ஆளுநர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஆளுநர்கள், அரசியல் அமைப்புகள் நடத்துகிற கூட்டங்களில் பங்கேற்பதென்பது, சனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது. ஆளுநர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதை மீறும் ஆளுநர்கள் தங்கள் பதவிகளை துறந்து பின்னர் எது வேண்டுமானாலும் செய்யலாம். பதவியில் இருந்து கொண்டே இவ்வாறு செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்