சீமைக்கிழுவை மரத்திலிருந்து மின்சாரம், இலங்கை – சீனா ஒப்பந்தம்

சீமைக்கிழுவை (கிளிரிசீடியா) மரத்தை எரிபொருளாகப் பயன்படுத்தி, பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டம் ஒன்றை சிறிலங்காவுடன் இணைந்து சீனா மேற்கொள்ளவுள்ளது.

மொனராகல மாவட்டத்தில், 70 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் இந்த மின் திட்டம் அமைக்கப்படவுள்ளது.

சீனாவின் Beijing Full Dimension Power Tech Company Ltd , Nanjing Turbine and Electric Machinery Group Company Ltd மற்றும் Electric Machinery Group Company Ltd, ஆகிய நிறுவனங்கள், சிறிலங்காவின், IMS Holdings நிறுவனத்துடன் இணைந்து இந்த மின் திட்டத்தை அமைக்கவுள்ளன.

இதற்கான உடன்பாடு நேற்று -19- கையெழுத்திடப்பட்டுள்ளது.

சீமைக்கிழுவை எனப்படும் கிளிறிசிடியா மரத்தை எரித்து, பெறப்படும் எரிபொருளில் இருந்தே, இந்த திட்டத்தின் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படவுள்ளது.

இதன் மூலம், நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயனடைவர். ஆண்டுக்கு 3.2 மில்லியன் டொலருக்கு சீமைக்கிழுவை மரங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம், வரும் செப்ரெம்பர் மாதம் மின்சார உற்பத்தி, தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்