நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட்டோரை விடுவிக்க பரிந்துரை!

நன்னடத்தை அடிப்படையில் நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரை விடுதலை செய்ய முடியும் என்று சிறைச்சாலையினர் தமிழக அரசுக்குப் பரிந்துரைத்துள்ளனர்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நல்லொழுக்கம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படுவர் என்று தமிழக அரசின் சுற்றறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

எனவே, அதற்கான பட்டியல் எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்தப் பட்டியலில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறைகளில் 26 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர் என்று தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்