மகிந்த ராஜபக்ஸவின் மீள்வருகையை வரவேற்று, சு.சுவாமி மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்

மகிந்த ராஜபக்ஸ இலங்கையில் மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என பாரதீய ஜனதாகட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையினர் வாழும் பகுதிகளில் ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது தொடர்பாக பாரதீய ஜனதாகட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தனது ருவீட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசியலில் ராஜபக்சஸ மீண்டு வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. ராஜபக்ஸ விரைவில் இலங்கையின் ஜனாதிபதியாக வேண்டும். என சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்