என்னைக் காய்வெட்டி என்னுடன் இணைந்த பங்காளிகள் செயற்பட்டு வருகின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலர் வீ.ஆனந்தசங்கரி.
“என்னுடன் இணைந்த பங்காளிகள் இப்போது தமது கட்சியை வளர்க்கப் பார்க்கின்றார்கள். விகிதாசார ஆசனங்கள் கட்சிக்கு கிடைத்துள்ளன. அவற்றுக்கு நான் கூறுபவர்களை அவர்கள் நியமிக்கவில்லை. என்னைக் “காய்வெட்டி” செயற்படுகின்றனர்.
என்னைப் பயன்படுத்தி தமது தேவையை நிறைவேற்றுவதற்குத்தான் அவர்கள் முயல்கின்றார்கள்.”- என்று அவர் கூறியுள்ளார்.