நெல்தளம் இன்றி விவசாயிகள் வீதியில் காயப்போடும் மக்கள் தமக்கு நெல்தளம் அமைத்துத்தருமாறும் கோரிக்கை!!

தற்போது பெரும்போக நெற் செய்கை அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் நெற் தளம் இன்றி பிரதான வீதிகளில் அதனைக்காயவைத்து வரும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு பொதுமக்கள் வீதிகளில் காயவைப்பதனால் வீதிகளில் விபத்துக்கள் எற்படுகின்றன.

விவசாயிகள் தமக்கு நெற் தளம் இன்மையாலேயே தாங்கள் பிரதான வீதிகளில் காயவைத்து வருவதாகவும் தமக்கு நெற்தளம் அமைத்துத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெற்களை புளியங்குளம்,நெடுங்கேணி, ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு போன்ற பிரதான வீதிகளில் நெற்களை காயவைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்