தமிழர்களுக்கு பயந்து தனது லண்டன் பயணத்தை இரகசியமாகப் பேணிவரும் நாமல் !!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச லண்டனுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அவர் லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழர்களுக்குப் பயந்து தனது பயண விவரங்களை இரகசியமாகப் பேணி வருவதாக தெரி விக்கப்படுகின்றது.

பொதுநலவாய மாநாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கான கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச லண்டன் சென்றுள்ளார்.

தனது பயணம் தொடர்பில் அவர் இரகசியம் காப்பதாகவும், தனது நடவடிக்கைகள் அனைத்தையும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பதிவிடும் நாமல் இந்தப் பயணம் தொடர்பில் இரகசியம் காப்பது புலம்பெயர் தமிழ் மக்களுக்குப் பயந்துதான் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவர் லண்டன் சென்றிருக்கும் தகவல் புலம்பெயர் தமிழர்களுக்கு தெரிந்தால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இவருக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் போராட்டங்களை நடத்தலாம் என்று கருதியே அவரது பயணம் தொடர்பில் இரகசியம் பேணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்