துருக்கி இராணுவத்தினர் மீது குர்திஸ் போராளிகள் தாக்குதல் – 9 பேர் பலி

சிரியாவின் அப்ரின் பகுதியில் துருக்கி இராணுவத்தினர் மீது குர்திஸ் போராளிகள் மேற்கொண்ட தாக்குதலில் 9 துருக்கி படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
குர்திஸ் போராளிகள் துருக்கியின் விசேட படையணி மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு சுரங்கப்பாதைகள் போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர்.

தாக்குதலில் சிக்குண்ட படையினரை மீட்பதற்காக அனுப்பப்பட்ட ஹெலிக்கொப்டர் ஓன்று தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்துள்ளது.
துருக்கி இராணுவம் இந்த தாக்குதல் இடம்பெற்றதை ஏற்றுக்கொண்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்