சிரிய நாட்டில் ஏற்பட்டுள்ள போரினால் இடம்பெறும் மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இன்று போராட்டம் இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் முதன்மைச் சந்திக்கு அருகில் இந்தக் போராட்டம் நடைபெற்றது. அதில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுபடுத்தும் படங்களுடன் கூடிய பாதகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர். குறிப்பாக பாலச்சந்திரனின் படங்கள் தென்பட்டன.
சிரியப் படுகொலையைக் கண்டித்து வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாவட்டங்களில் நேற்று முன்தினம் கவனவீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இன்று முல்லைத்தீவு, மன்னார், மலையகம் போன்ற இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்றன.