உறவுகளைத் தேடும் போராட்டம் மருதங்கேணியில் ஓராண்டை கடந்தது!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் ஒருவருடத்தைக் கடந்துள்ளது.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின் முன்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் அமைப்பால், கடந்த வருடம் மார்ச் மாதம் 15ஆம் திகதி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த போராட்டம் ஒரு வருட நிறைவை இதனை முன்னிட்டு
இன்று கண்டனப் பேரணியையும் கவனவீர்ப்பு போராட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, வவுனியா போன்ற இடங்களிலும் காணாமல் போனோரது உறவினர்கள் நீண்டகாலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்