ஜெனிவா பிரேரணையை நிறைவேற்ற அரசு எதையும் செய்யவில்லை! – ஜஸ்மின் சூக்கா

ஜெனி­வாவில் 2015ஆம் ஆண்டு நிறை­வேற்றப்­பட்ட பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வதற்கு இலங்கை அர­சாங்கம் எத­னையும் செய்­ய­வில்லை. காணாமல் போனோர் குறித்து விசா­ரிக்கும் அலு­வ­ல­கமும் பாதிக்­கப்­பட்ட மக்­களை திருப்­திப்­ப­டுத்­து­வ­தாக இல்லை என்று சமா­தா­னத்­திற்கும் நீதிக்­கு­மான சர்­வ­தேச அமைப்பின் தலை­வ­ர் ஜஸ்மின் சூக்கா தெரி­வித்தார்.

ஜெனி­வாவில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற இலங்கை மனித உரிமை நிலை தொடர்­பான விசேட உப­கு­ழுக்­கூட்­டத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

யுத்­தக்­குற்­றங்கள் மனி­த­கு­லத்­திற்கு எதி­ரான குற்­றங்கள் என்ற விட­யங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே ஜகத் ஜய­சூ­ரிய மீது சர்­வ­தேச நியா­யா­திக்கம் பிர­யோ­கிக்­கப்­பட்­டது. இதே­வேளை யுத்­தத்­தின்­போது என்ன நடந்­தது என்ற உண்மை கண்­ட­றி­யப்­ப­ட­வேண்டும். அத­ன­டிப்­ப­டை­யி­லேயே தர்ஸ்மன் தலை­மை­யி­லான நிபுணர் குழுவை அன்று பான்கீ மூன் நிய­மித்தார். நானும் அதில் அங்­கத்­துவம் பெற்றேன்.

யுத்தக் குற்­றங்கள் தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து ஆரா­யு­மாறு எமது நிபுணர் குழு­விற்கு பணிக்­கப்­பட்­டது. நாம் சிவி­லி­யன்­களின் உயி­ரி­ழப்பு தொடர்­பாக ஆராய்ந்தோம். எமக்கு கிடைத்த தக­வல்­களின் படி 40 ஆயிரம் என்று கூறப்­பட்­டது. நாங்கள் தர­வு­களை சேக­ரித்தோம். எமது பரிந்­து­ரைக்கு அமை­வா­கவே முன்னாள் ஐ.நா. செய­லாளர் பான் கீ மூன் உள்­ளக விசா­ரணை பொறி­முறை ஒன்றை இலங்­கையின் யுத்தம் தொடர்பில் அமைக்­கு­மாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் நாம் மதிப்­பிட்ட எண்­ணிக்­கையை விட உயி­ரி­ழப்­புக்கள் அதி­க­மாக இருக்கும் என கரு­தப்­பட்­டது. அது 75 ஆயி­ர­மாக இருக்கும் என்றும் கரு­தப்­பட்­டது.

நாங்கள் மத பிர­தி­நி­தி­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டினோம். நாங்கள் சாட்­சி­யா­ளர்­க­ளிடம் ஆதா­ரங்­களைப் பெற்றோம். எமக்கு கிடைத்த முறை­யான தக­வல்­களின் பிர­கா­ரமே எமது மதிப்­பீட்டை வெளி­யிட்டோம்.

இந்­நி­லையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பாக ஜெனி­வாவில் ஒரு பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. அந்த பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்­கமும் அனு­ச­ரணை வழங்­கி­யது. உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு, விசேட நீதி­மன்றம், காணா­மல்­போனோர் அலு­வ­லகம் என்­பன குறித்து இந்த பிரே­ரணை வலி­யு­றுத்­து­கின்­றது. நட்­ட­ஈடு தொடர்­பா­கவும் இந்த பிரே­ரணை வலி­யு­றுத்­து­கின்­றது. ஆனால் இது­வரை எந்த முன்­னேற்­றமும் இந்தப் பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வதில் ஏற்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. அர­சாங்கம் எத­னையும் செய்­ய­வில்லை.

உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை நிறு­வதன் மூலம் பல விட­யங்­களை அறிந்­து­கொள்ள முடியும். குறிப்­பாக பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை மட்­டு­மன்றி முழு­நாட்­டுக்கும் இந்த விட­யத்தை தெரிந்­து­கொள்­வ­தற்­கான சந்­தர்ப்பம் கிடைக்கும். அத­னால்தான் ஒரு நாட்டில் நிறு­வன ரீதி­யான கட்­ட­மைப்பில் இதனை செய்­ய­வேண்­டு­மெனக் கூறப்­ப­டு­கின்­றது.

இலங்கை அதி­க­மான காணா­மல்­போ­னோர்கள் தொடர்­பான முறைப்­பா­டு­களை கொண்­டுள்ள நாடு­களில் ஒன்­றாக காணப்­ப­டு­கின்­றது. காணா­மல்­போனோர் குறித்த அலு­வ­ல­கத்தை நிய­மித்­த­மை­யா­னது ஒரு சிறந்த நடவடிக்கை என்றே சர்வதேச சமூகம் பார்க்கின்றது. அதன் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்றே சர்வதேச சமூகம் கருதுகின்றது. எனினும் வரைபில் சில குறைபாடுகள் இருப்பதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடையாத நிலைமையும் இருக்கின்றது. பலர் அது சரியான முறையில் இயங்காது என்று குறிப்பிடுகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்