அச்சு கைத்தொழில் நகரமொன்றை உருவாக்கத்திட்டம்!

அச்சுத்துறை சார்ந்த தொழில் துறைக்கு வசதிகளை வழங்கும் கைத்தொழில் நகரமொன்று நாட்டில் உருவாக்கப்படவுள்ளதாகசிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஆசியாவின் அச்சுத்தொழில் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற இலங்கை அச்சு துறை சார் சிறப்பு விருது விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ”தற்போதைய அரசாங்கம் இந்தத் துறைக்கான பல வசதிகளைச் செய்துள்ளதெனவும் தேவையான மேலதிக வசதிகளை வழங்கவும் தயார் எனவும் நாட்டின் முன்னேற்றத்திற்காக நாம் உலக சந்தையை வெற்றி கொள்ள வேண்டும்.

இதற்காக நாட்டின் ஏற்றுமதித் துறை அபிவிருத்தியடைய வேண்டும். தரமான உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும்” எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்