விடுதலை புலிகளின் தங்கம் தோண்டும் பணியில் மர்மபொருள்!

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நடைபெற்ற விடுதலை புலிகளின் தங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளது.

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலை புலிகளின் தங்கம் இருப்பதாக கிடைத்த தகவலின்படி மீட்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதனடிப்படையிலில் கனரக (பக்கோ) வாகனத்தின் உதவியில் சம்பந்தப்பட்ட பகுதியில் தங்கம் மீட்பு பணிக்காக 8 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தோண்டப்பட்ட பகுதியில் கனரக வாகனத்தில் மர்ம பொருள் ஒன்று முட்டியுள்ளதால் தோண்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. அதனை தங்கம் புதைத்த கொங்கிரீட் என நினைத்து மீண்டும் நீதிமன்றின் அனுமதியுடன் மீட்பு பணி நடைபெற்றுள்ளது.

விடுதலை புலிகளின் தங்கம் தோண்டும் பணியில் மர்மபொருள்!

இந்நிலையில் 4 மணிநேரம் நடைபெற்ற மீட்பு பணியில் கனரக வாகனத்தில் முட்டியது, முல்லைத்தீவு கரையோர பகுதியில் காணப்படும் பாறைகள் என தெரியவந்துள்ளது. இதனால் ஏமாற்றத்துடன் தங்கம் மீட்பு பணி நிறைவுக்கு வந்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்