கூட்டமைப்பு ஆதரிக்காது – சம்பந்தன் அறிவிப்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனை அறிவித்துள்ளார்.

‘பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையானது ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலாகும்.

தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் மக்கள் ஆணை, கூட்டு அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த ஆணையை நிறைவேற்றுவதற்கு அழுத்தங்களைக் கொடுக்கும்.

2015 தேர்தல்களில் அளிக்கப்பட்ட மக்களின் ஆணைக்கு மாறாக நாடாளுமன்றம் செயற்படக் கூடாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டமைப்பு ஆதரிக்காது என்று இரா.சம்பந்தன் கூறிய போதிலும், கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பார்களா, எதிர்த்து வாக்களிப்பார்களா என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை.

About இலக்கியன்

மறுமொழி இடவும்