கனடா உறவுகளால் போரால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகள் மற்றும் மாணவர்களுக்கான உதவிகள்!

புலம்பெயர்ந்து சென்றாலும் தாயகநலனிலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதரங்களிலும் புலம்பெயர் ஈழ மக்கள் என்றென்றும் கைகொடுப்பர் என்பதை மீண்டும் ஒருதடவை நிரூபணம் செய்திருக்கிறார்கள் கனடா தேசத்தில் ரொரண்டோ,வன்கூவர் ஆகிய பிரதேசங்களில் வாழும் புலம்பெயர்ந்த உறவுகள் கனடா தேசத்தில் ரொரண்டோ,வன்கூவர் ஆகிய பிரதேசங்களில் வாழும் புலம்பெயர்ந்த உறவுகளால் அன்பளிப்புச் செய்யப்பட்ட கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டிகள் 2018.04.07 நேற்று எமது வன்னி மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் வைத்து 93 மாணவர்களுக்கு புத்தகப்பையுடன் சேர்ந்த கற்றல் உபகரணங்களும் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகளுடைய 09 மாணவர்களுக்கும் 01 பயனாளிக்கும் துவிச்சக்கரவண்டிகளும் வழங்கப்பட்டன.

இந்த உதவியைச் செய்த நல்லுள்ளங்களுக்கு எமது காப்பகம் சார்பிலும், பயனாளிகள் சார்பிலும், மாணவர்கள் சார்பிலும் இதய பூர்வமான நன்றிகளைத்தெரிவித்துக் கொள்ளுக்கின்றோம்

+

மறுமொழி இடவும்