யாழ்ப்பாணம் குருநகர் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றதாகவும் இதுவரையில் கரைக்குத் திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அவர்கள் சென்ற படகு மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் இருவர் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த மீனவர்களின் உறவினர்கள் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.