சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல்! வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு!

சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக மேற்கு நாடுகளின் கூட்டுப்படைகள் அறிவித்திருந்தன.

குறிப்பாக தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் மாகாணத்தில் ரசாயன ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடங்கள், சிரியாவின் ஆயுத கிடங்குகள் மற்றும் ராணுவ முகாம்களை துல்லியமாக குறிவைத்து இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால், சிரியா மீது இன்று வீசப்பட்ட பெரும்பான்மையான ஏவுகணைகள் வழிமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிரியா அரசின் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியா மீது அமெரிக்கா அதிரடியாக தாக்குதல் நடத்தலாம் என ரஷியா உளவுத்துறையினர் ஏற்கனவே எச்சரித்து இருந்ததால் தற்காப்பு நடவடிக்கையாக முக்கியமான ராணுவ முகாம்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை நாங்கள் முன்னரே காலி செய்து விட்டோம்.

அமெரிக்கா தலைமையிலான விமானப்படைகள் சிரியாவின் மீது இன்று சுமார் 30 ஏவுகணைகளை வீசின. அவற்றில் மூன்றில் ஒரு பகுதி ஏவுகணைகள் வழிமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டனவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்