ஐ.நா அமைதிப்படை மூலம் சிறிலங்கா இராணுவத்துக்கு 161 மில்லியன் டொலர் வருமானம்

ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம், சிறிலங்கா இராணுவம் இதுவரை 161 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“வெளிநாடுகளில் ஐ.நா அமைதிப்படைகளில் பணியாற்றும் சிறிலங்கா படையினர் மூலம், 2004ஆம் ஆண்டு தொடக்கம், ஆண்டு தோறும் குறைந்தது 2.5 மில்லியன் டொலர் வருமானம் பெறப்படுகிறது.

இதுவரை சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த, 18,179 சிறிலங்கா படையினர் வெளிநாடுகளில் ஐ.நா அமைதிப்படைக்காக பணியாற்றியுள்ளனர்.

தற்போது, லெபனான், தென்சூடான்., மாலி, அபேயி, நியூயோர்க், மத்திய ஆபிரிக்க குடியரசு, மேற்கு சகாரா, உள்ளிட்ட இடங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் ஐ.நா அமைதிப்படையினர் பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றனர்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்