புலிகளின் புலனாய்வுப் பிரிவு ‘மொறிஸ்’ விடுவிக்கப்படவில்லை!

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மொறிஸ் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக வெளியாகிய தகவல்களை, சிறிலங்காவின் மூத்த புலனாய்வு அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானுக்கு மிகவும் நெருக்கமானவரான மொறிஸ், கொழும்பில் பல உயர்மட்டத் தாக்குதல்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்.

தற்போது தடுப்புக்காவலில் உள்ள அவர், நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்கிறார்.

பருத்தித்துறைப் பொறுப்பாளராக முன்னர் இருந்த மொறிஸ், இந்திய அமைதிப்படைக்கு எதிரான தாக்குதல்களிலும் பங்கேற்றவர்.

இவர் விடுவிக்கப்பட்டு விட்டார் என்று வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று மூத்த சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகள் சண்டே ரைம்ஸ் வாரஇதழுக்குத் தெரிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்