சிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி!

புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று பிற்பகல் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காக யுவதிகள் சிலர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். அப்போது, அவர்களுக்கு பின்னால் வந்த சிறிலங்கா இராணுவ சிப்பாய் ஒருவர் முந்திச் சென்று ஏ.டி.எம் அறைக்குள் நுழைந்து பணத்தை பெற்றுக்கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது, பின்வரிசையில் நின்ற யுவதி ஒருவர் குறித்த சிறிலங்கா இராணுவ சிப்பாயிடம், “நாங்களும் இதுக்குதான் நிற்கின்றோம்” என்று கூறியுள்ளார்.

அதற்கு அந்த சிறிலங்கா இராணுவ சிப்பாய் எனக்காக கொமாண்டர் காத்திருக்கின்றார் என்று தமிழில் பதிலளித்துள்ளார். எனக்கும் எங்கள் கொமாண்டர் காத்திருக்கின்றார் என்று உடனடியாக அந்த யுவதியும் தெரிவித்துள்ளார்.அந்த யுவதியின் பதிலைகேட்டு சிறிலங்கா இராணுவ வீரர் குழம்பியுள்ளதுடன், இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. ஏனைய யுவதிகளும் சரமாரியாக பேச தொடங்க, சிறிலங்கா சிப்பாய் அந்த இடத்தை விட்டு உடனேயே சென்றுவிட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்