சர்ச்சைகளின் பின்னர் வெளியானது காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரம்

கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வடக்கு கிழக்கில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் மற்றும் இராணுவத்தினரின் தடுப்புக்காவலில் இருந்து காணாமல் ஆக்கப்பட்ட 280 தமிழர்களின் விபரங்களை சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வெளியிட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வருகின்ற நிலையில் இதுவரை கிடைக்கப்பெற்றவர்களின் பெயர் மற்றும் அவரது விபரங்கள் அடங்கிய தகவல்கள் ஒளிப்படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.

கொழும்பு, ஓமந்தை, யாழ்ப்பாணம், வவுனியா, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு போன்ற இடங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர், விபரங்களே வெளியிடப்பட்டுள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்