மரணத்திற்கு அச்சமில்லை:முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்!

சிங்கள இனவாதிகளால் கொல்லப்படுவது குறித்து எனக்கு எந்தவொரு அச்சமும் இல்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உங்களைப் பற்றிதெற்கில் மிகக் கேவலமாகக் கதைக்கப்படுகிறது. பிரபாகரன் தலையில் கோடாலியால் வெட்டியதுபோல் உங்கள் தலையிலும் வெட்டவேண்டும் என்று கூறி உங்கள் வெட்டப்பட்ட தலையை வலைத்தளங்களில் படங்களாக அனுப்புகின்றார்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ என்று பயப்படுகின்றோம். மேலதிக பாதுகாப்பைக் கோரிப் பெறமுடியாதாவென முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றிற்கே முதலமைச்சர் மரணம் பற்றி அச்சமில்லையென தெரிவித்துள்ள அவர் மேலும் விபரிக்கையில்

எமது முள்ளிவாய்கால் நிகழ்வு இவ்வாறான ஆத்திரத்தை சில சிங்களவர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதன் அர்த்தம் என்னவென்றால் “உங்களின் அரசியல் பிரச்சனைகளை வெளிப்படுத்தாதீர்கள்! வெளிப்படுத்தினால் அடிப்போம்,கொல்லுவோம்,நாட்டைவிட்டுத் துரத்துவோம்.”என்பதே. சிங்களமக்களின் இவ்வாறான எதிர்மறைக்கருத்துக்களும் வன் நடவடிக்கைகளும் முன்னரும் வெளிவந்துள்ளன. “சிங்களம் மட்டும்”சட்டம் கொண்டு வந்த போது எம்மைப் பயப்படுத்திப்பேசாது வைக்கப் பார்த்தார்கள். காலி முகத்திடலில் சத்தியாக்கிரகம் இருந்த என் நண்பர் மௌசூர் மௌலானாவையும் வேறு சிலரையும் பேரை ஏரிக்குள் அப்படியே தூக்கி வீசினார்கள். 58ம் ஆண்டுக் கலவரம், 77ம் ஆண்டுக் கலவரம், 83ம் ஆண்டுக் கலவரம் என்று தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போல் எமது முக்கிய தேசிய அரசியல் கட்சிகள் தமது ஆதரவாளர்கள் மூலமாக எங்களுக்குச் செய்வதெல்லாம் செய்து விட்டுதுக்கம் விசாரிக்க வந்தார்கள். இது இலங்கை அரசியலில் சர்வசாதாரணம்.

இவற்றினால் சிங்கள அரசியல் தலைமைத்துவம் எதைக் கூறுகின்றது? “தமிழர்களை நாம் கட்டி ஆண்டு கொண்டிருகின்றோம், அவர்களை அதிகம் பேசவிடக்கூடாது. விட்டால் எமது உண்மை சொரூபம் உலகத்திற்குத் தெரிந்து விடும். ஆகவே அதிகம் பேசுபவனுக்கு உயிர்ப் பயத்தை ஏற்படுத்துவோம்,வெள்ளை வானில் கொண்டு சென்று உரிய தண்டனை வழங்குவோம். சர்வதேசம் கேள்வி கேட்டால் நாங்கள் உதாரண புருஷர்கள் பிழையே செய்யமாட்டோம் என்போம். சென்ற முள்ளிவாய்க்கால் போரில்க்கூட ஒரு கையில் மனித உரிமைசாசனம் மறுகையில் துப்பாக்கிவைத்துக்கொண்டே போராடினோம். அப்பாவி ஒருவர் தானும் கொல்லப்படவில்லை. பூஜ்ய அப்பாவி மரணங்கள் என்று கூறுவோம். இந்தத் தமிழர்கள் அனைவரும் தீவிரவாதிகள்;,பிரிவினைவாதிகள்;,வன்முறைவாதிகள் என்றெல்லாம் உலகிற்கு எடுத்துக் காட்டுவோம்”என்றவாறு தான் கூறி வந்துள்ளனர்.

நாங்களும் அவற்றைக் கண்டு கேட்டுப் பயந்துவிட்டோம். எனவே ஒன்றில் இலங்கையை விட்டு வெளியேறி எமது மன உளைச்சல்களை வெளியிலிருந்து வெளிப்படுத்திக்கொண்டு வருகின்றோம்.அங்கிருந்து உள்;ர்வாசிகளுக்குப் பணம் தந்துஉதவுகின்றோம். அல்லது உள்;ரில் இருக்கும் எம்மவரோ மக்களிடம் ஒருமுகம் அரசாங்கத்திற்கு இன்னொருமுகம் காட்டுகின்றார்கள். எமது அடிப்படை அரசியல் கோரிக்கைகளை தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்குகின்றோம். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அரசாங்கத்திற்கு வேறொருமுகம் காட்டுகின்றோம். “நீங்கள் எதைத் தந்தாலும் நாம் பெற்றுக் கொள்வோம்”என்றதொனிப்பட அவர்களுடன் பேசுகின்றோம். “நாங்கள் “தா”“தா”என்றுகேட்போம். ஆனால் நீங்கள் தருவதைத் தாருங்கள்”என்கின்றோம். அதற்குப் பிரதி உபகாரமாக அரசாங்கமும் தனது உதவிக் கரங்களை நீட்டுகின்றது. தனிப்பட்ட உதவிகளைப் பெற்றுவிட்டு உண்மையான, எமக்குத் தேவையான அரசியல் பேசாது வந்து விடுகின்றோம்.

இதைப் பார்த்ததும் சிங்கள மக்கள் என்ன நினைக்கின்றார்கள்? “பாருங்கள்! இவர்கள் எவ்வளவு நல்லவர்கள்?நாம் சொல்வதுபோல் கேட்டு நடக்கின்றார்கள்”என்று கூறுகின்றார்கள். எங்களைக் கொழும்பில் தற்போதைக்கு இருக்க விடுகின்றார்கள். ஆனால் தப்பித்தவறி எமது அபிலாகளை எமது அரசியல் எதிர்பார்ப்புக்களை வெளியிட்டோமானால் நாங்கள் அவர்களுக்குக் கொடூரமானவர்கள்,தீவிரவாதிகள்,பிரிவினைவாதிகள்,தீயவர்ஆகிவிடுவோம். இவ்வாறான மிரட்டு தலைத்தான் நீங்கள் குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.உண்மை நிலை அறியாமல் அவர்கள் பிதற்றுகின்றார்கள். அதைப்பார்த்து நீங்கள் பதறுகின்றீர்கள்.

இதிலிருந்து ஒன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும். எமது கோரிக்கைகளை,மனக்கிடக்கைகளை வெளிப்படையாக சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறாமல் எமக்குள் ஒன்று கூறி அவர்களுக்கு இன்னொன்று கூறிவந்ததால்த்தான் நியாயமான உரிமைகள் கோரும் ஒருவர் கூட அவர்களுக்கு நாட்டின் துரோகி ஆகின்றார். தீவிரவாதி ஆகின்றார். நாங்கள் முதலில் இருந்தே எமது கொள்கைகளுக்கு விஸ்வாசமாக நடந்து கொண்டிருந்தோமானால் உண்மையாக உரிமைகள் கோருபவரை சிங்களமக்கள் இந்தளவுக்கு வெறுத்திருக்க மாட்டார்கள். சிங்கள மக்கள் சீற்றமடைய நாங்கள் தான்; காரணம். எங்கள் பயமே காரணம். இனி உங்கள் கேள்விக்குவருவோம்.

உயிருக்கு ஆபத்து வரும் என்று பயப்படுகின்றீர்கள். உயிருக்கு ஆபத்து எப்பொழுதும் யாருக்கும் இருந்துகொண்டே இருக்கின்றது. வெள்ளத்தில் பாதிப்புற்றவர்கள் எத்தனைபேர்? விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர்? இடி மின்னலினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர்? துரையப்பா விளையாட்டரங்கில் அண்மைய இடி மின்னலால் பாரிய கண்ணாடி ஒன்று வெடித்து விழுந்தது என்று எனக்கு நேற்றுக் காட்டினார்கள்.ஆகவே உரியநேரம் வரும்போது பலதும் நiபெறுவன. உயிர் கூடதானாகவே பிரிந்துசெல்லும்.

அதற்காக சொல்லவேண்டியதை விடுத்து சிங்களவருக்கு ஏற்றசொகுசான கருத்துக்களைக் கூறிக்கொண்டு இருந்தோமானால் நாம் தப்புவோம் என்று நினைப்பது தவறு. கட்டாயம் அவன் கொல்ல இருப்பவன் கொல்லத்தான் போகின்றான். சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு சாவது மேலா அல்லது சொகுசுவார்த்தைகளைக் கூறிவிட்டு வெள்ளம் தலைக்கேறும் போது அதை மாற்றி உண்மையை உரைக்கும் போது நாம் உயிர்ப்பலியாவதுமேலா? எமக்கென்று கடமைகள் உண்டு. அவற்றை நாம் சரியாகச் செய்வோம். உயிரைக் காலன் வந்து எடுக்கும் நேரம் எடுத்துச் செல்லட்டும். எந்த ஒரு அஹிம்சா மூர்த்தி கூட கொல்லப்படவேண்டும் என்று நியதியிருந்தால் அவரின் மரணம் அவ்வாறே நடக்கும். மகாத்மாகாந்தி இதற்கொரு உதாரணம்.
முள்ளிவாய்க்காலில் நான் கூறியவற்றினாலும் அவ்வாறான ஒரு நிகழ்ச்சி நடந்ததாலும் ஏன் சிலசிங்களமக்கள் வெகுண்டெழுந்துள்ளார்கள்? பல காரணங்களைநான் கூறுவேன்.

1. முன்னைய இராஜபக்சஅரசாங்கம் வெளிப்படையாக எம்மைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. வாய் திறந்தால் வன்முறை அல்லது சிறைவாசம் என்றிருந்தது. ஜனநாயக நாடுகளின் ஒத்துழைப்பால் உருவாகிய இந்தஅரசாங்கம் எம்மை முன்போல் கட்டிவைக்க முடியாத நிலையில் இருக்கின்றது. எனக்கெதிராக முகப்பதிவில் எழுதிய ஒருவரைப்பற்றி எமது அலுவலர்கள் ஆராய்ந்து பார்த்தார்கள். காலியில் வசிக்கும் அவர் மகிந்த இராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளர் என்பது தெரியவந்தது. அப்படியாயின் என்னைப் பற்றிக்கோபம் கொள்வோர் யாரெனில் முன்னர் எம்மை வாய்பேசாமடந்தையர் ஆக்கிவைத்திருந்தோரே அவர்கள் என்று அடையாளம் காணலாம். போரைமுடிவுக்குக் கொண்டு வந்தவர்கள்தான்; அவர்கள். முள்ளிவாய்க்காலில் நடந்தவற்றை உலகம் அறியக்கூடாது என்று கூத்தாடுபவர்கள். உலகம் உண்மையை எந்தவிதப்பட்டும் அறிந்துவிடக்கூடாது. ஆகவேகொலை மிரட்டலாலாவது எம்மைக் கட்டுப்படுத்தவேண்டும், வாயடைக்கச் செய்யவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் உள்ளனர்.

2. இன்றைய நிலைவேறு முன்னர் இருந்த நிலைவேறு. உலகம் உண்மையை உணராது முன்னர் இருந்தது. அப்பாவிகள் கொல்லப்பட்டமை, இனப்படுகொலை போன்ற உண்மைகள் தற்போது சிங்கள மக்களால் உணரப்பட்டுள்ளன. சர்வதேசத்தாலும் உணரப்பட்டுள்ளன. இதுவரையில் ஜெனீவாவில் கொடுத்த காலக்கேடுவிரைவில் முடிவுக்கு வரப்போகின்றது. அமெரிக்க ஸ்தானிகர் அதுல் கேசப் அவர்கள் தாம் செய்வதாக ஜெனிவாவில் வாக்குறுதி அளித்தனவற்றை இலங்கை கண்டிப்பாகச் செய்துமுடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் செய்வதறியாது தடுமாறுகின்றது. இந்த நேரத்தில் இவ்வாறான ஒரு நிகழ்வு தம்மைப் பாதிக்கும் என்றுநினைத்து எம்மை அடக்க முயன்றிருக்கக்கூடும்.

3. இராணுவம் ஒருபுறம், அரசாங்கம் மறுபுறம் தமிழர்களுக்கு நன்மைகள் பெற்றுத் தரப்போகின்றோம் என்று கூறிவருகின்றன. தமிழர்களின் அடிப்படை உரிமைகளைக் கொடுப்போம் என்றுஎவரும் கூறவில்லை. சிங்களவர் கூறுவதுபோல் “போணிக்கா” (பொம்மைகள்) வேண்டித் தருவதாக வாக்களிக்கின்றார்களே ஒளிய 70 வருடபிரச்சனையைத் தீர்ப்பதாகக் கூறவில்லை. அந்தப் பிரச்சனைகளைநினைவுபடுத்தினால்த்தான் கொலைமிரட்டல்கள் வருகின்றன. ஆகவேதான் எந்த ஒரு சிங்கள அரசாங்கமும் பாரியநெருக்கடி இருந்தால் ஒளிய எமது அடிப்படைப்பிரச்சனைகளைத் தீர்க்கமுன்வராது என்று கூறிவருகின்றேன்.

4. நான் “அடிப்படை”என்று கூறும் போது எமது தனித்துவத்தைப் பாதுகாப்பதையே கூறிவருகின்றேன். வடகிழக்கு இணைப்புவேண்டும் என்று கூறும் போது அங்கு தமிழ் மொழியே இது காறும் கோலொச்சி வந்தது. அது தொடர இணைப்பு அவசியம். எம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக இதுவரை நடத்திவந்த அரசாங்கம் எமது தனித்துவத்தை மதித்து சுயாட்சி வழங்கவேண்டும் என்பது இரண்டாவது அடிப்படைக் கோரிக்கை. தாயகம் என்பது அதனுள் அடங்கும். மூன்றாவதாக ஒற்றையாட்சிக்குக் கீழ் சிங்கள மேலாதிக்கம் தொடரும் என்பதால் சம~;டி அடிப்படையிலான அரசியல் யாப்பு கோரப்படுகின்றது.

5. சிங்கள மக்கள் மத்தியில் பலபிழையானசெய்திகள் சென்ற 70 வருடங்களாக பரப்பப்பட்டு வந்துள்ளன. இந்த நாடு தொன்று தொட்டு சிங்களவர் வாழ்ந்து வந்த நாடு. தமிழர் சோழர் காலத்தில் கி.பி பத்தாம் நூற்றாண்டில்த்தான் வந்தார்கள். அவர்கள் கள்ளத் தோணிகள். அவர்களை இந்தியாவிற்கு அடித்துத் துரத்தவேண்டும். அண்மையில் வந்தவர்கள் தமக்கென ஒருநாட்டைக் கேட்பது எவ்வளவு அயோக்கியத்தனம். இந்த உலகத்தில் எமக்கென இருப்பது இந்த ஒருநாடே. அதையும் தமிழர் பங்கு போடப் பார்க்கின்றார்கள். விடமாட்டோம் என்கின்றார்கள் அப்பாவிச் சிங்களவர்கள்.

உண்மையை அவர்களுக்கு எடுத்துரைக்க யாரும் இல்லை. இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே. சிங்களமொழி கி.பி 6ம் 7ம் நூற்றாண்டுகளிலேதான் வழக்கத்திற்குவந்தது. அதற்குமுன்னர் வாழ்ந்தவர்களைச் சிங்களவர் என்று அழைக்க முடியாது. துட்டகைமுனு கூட சிங்களவனாக இருந்திருக்கமுடியாது. ரின்ஏ பரிசீலனைகள் இன்றையசிங்களவர் ஆதித்திராவிடரே என்று கூறுகின்றன. தமிழர் பற்றிய உண்மையை அறிந்து கொண்டால் சிங்கள மக்களின் ஆர்ப்பாட்டங்கள் குறையக் கூடும்.அல்லது ஏமாற்றத்தில் இன்னமும் உக்கிரமடையக்கூடும்.
எம்மைக் கொல்ல எத்தனிப்பவர்கள் காட்டுமிராண்டிகள் போல் நடந்துகொள்ளாமல் தமது தலைவர்களை எம்முடன் பேச அனுப்பவேண்டும். நாம் எமது அடிப்படைகளை அவர்களுக்கு விளங்கவைப்போம். புரிந்துணர்வு அற்ற இன்றைய நிலையே இவ்வாறான பதட்டங்களுக்கு இடமளித்துள்ளதென நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்