சிவாஜிலிங்கத்தை முதலமைச்சராக்குங்கள் !

வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் விவகாரத்தை ஒரு கடிதத்தில் முடிக்க வேண்டிய முதலமைச்சர் மக்கள் ஆணைக்கு முரணாக செயற்பட்டுவருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள வடக்கு மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் மாகாணசபையின் முதல்வராக சிவாஜிலிங்கத்தை நியமித்தால் அவர் இந்த அமைச்சர்கள் விவகாரத்தை தீர்த்துவைப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய அமர்வில் சிவாஜிலிங்கத்திற்கும் அஸ்மினுக்குமிடையில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது. அமைச்சர்கள் பிரச்சனையைத் தீர்க்க முதலமைச்சருக்குப் பதிலாக தான் ஆளுநருக்கு ஆலோசனைக் கடிதம் எழுதப்போவதாகக் கூறிய சிவாஜிலிங்கம் அஸ்மின் நல்லாட்சிக்கான முன்னணியால் துக்கி எறியப்பட்டவர் என்றும் தேசியப் பட்டியில் உறுப்பினர் என்றும் அஸ்மினைச் சீண்டிவிட்டார்.

இதனால் கோபமடைந்த அஸ்மின் சிவாஜிலிங்கம் பொய்கள் உரைப்பவர் என்று கூறியதோடு நாம் எல்லோரும் இணைந்து சிவாஜிலிங்கத்தை முதலமைச்சராக்கிவிடுவோம் அவர் அமைச்சர்கள் பிரச்சனையைத் தீர்த்துவைத்து இந்த மாகாணசபையை திறம்பட நடத்துவார் என கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்