தமிழ் சிறுமி எடுத்த விபரீத முடிவு-அதிர்ச்சியில் பெற்றோர்!

தமிழகத்தில் தாயின் அன்பு கிடைக்காததால், அந்த பெண் திருடனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி. இவருக்குத் திருமணமாகி, தேவி(14) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் அடுத்த குழந்தை பிறந்ததால் மகள் தேவியை அன்னலட்சுமி சரிவர கவனிக்காமல் இருந்துள்ளார்.

இதனால் அவரும் தாயின் அன்பு கிடைக்காமல் ஏங்கி வந்துள்ளார். திடீரென்று கடந்த 30-ஆம் திகதி கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பாதததால், தேவியின் தாய் பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

பொலிசார் நடத்திய தீவிர வேட்டையில், புகார் கொடுத்த ஒரு மணி நேரத்திலே அவரது மகள் ராஜா என்ற திருடனுடன் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின் ராஜாவின் உறவினர்கள் வீட்டில் தேடிய போது உறவினர் ஒருவரின் வீட்டில் தேவி இருந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அப்போது, என்னை அவர் சரிவர கவனிப்பதில்லை. என்னிடம் அவர் அன்பாகப் பேசுவதில்லை. அதனால்தான் வீட்டை விட்டு வெளியில் சென்றேன் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

அன்னலட்சுமி தேவியை இனிமேல் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்