யாழில் ஹெரோயின் கைவசம் வைத்திருந்த குடும்பஸ்தர் கைது!

ஹெரோயின் போதைப் பொருளை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கோண்டாவில் பகுதியில் வைத்து குறித்த நபர் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடம் இருந்து சுமார் 9.850 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்