இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி

மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் பணியின் போது, இரும்புக் கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இதுவரையில் மன்னார் புதைகுழியில் இருந்து 266 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

மேலும் பல எலும்புக்கூடுகள் அங்கு புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் தொடர்ந்தும் தோண்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையிலேயே நேற்றைய அகழ்வுப் பணியின் போது மீட்கப்பட்ட எலும்புக் கூடு ஒன்றின் இரண்டு கால்களும், இரும்புக்கம்பியுடன் பிணைத்துக் கட்டப்பட்டிருந்தன.

இது அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்