ஸ்டாலினை கடுமையாக தாக்கிப்பேசிய டிடிவி தினகரன்

மு.க. ஸ்டாலின் ஒரு செல்லாத காசு என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

தேர்தல் தோல்வி பயத்தால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தம்மை குற்றம்சாட்டி வருவதாக அவர் கூறியுள்ளார்.

தருமபுரி அருகே பாலக்கோட்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை ஏரிகளுக்கு திருப்பிவிடக் கோரி அமமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது: ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய தலைவர்கள் இல்லாத நிலையில், புதிய நிர்வாகிகள் உள்ளதால் அனைத்து கட்சிகளும் புதிய கட்சிகள் தான் என தெரிவித்தார்.

தோல்வி பயத்தால் திமுக தலைவர் ஸ்டாலின் தம்மை குற்றம்சாட்டி வருகிறார் என்றும், அவர் ஒரு செல்லாத காசு எனவும் டிடிவி தினகரன் விமர்சித்தார். அரசியலுக்காக ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்காது என்றும் அவர் கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்