கூட்டணி வைத்து போட்டியிடமாட்டோம்-சீமான் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்குவதால் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படுகிறது என்றும், இது மிகப்பெரிய ஏமாற்று வேலை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அஜித்தின் நியாயமான முடிவை வரவேற்கிறேன் என்றும், பள்ளிகளின் தரம் குறைந்ததற்கு ஆசிரியர்கள் காரணம் என்பது பைத்தியக்காரத்தனம் என்றும் சீமான் கூறினார்.

முன்னதாக, வெற்றி பெறும் கட்சிக்கு வாக்களிப்போம் என்ற மனநிலையை கருத்துக்கணிப்பு மூலம் உருவாக்குகிறார்கள்.
மக்களவை தேர்தலில் மாநில கட்சிகள்தான் அதிக இடங்கள் வெல்லும் என்றும், மாநில கட்சிகள்தான் மத்திய ஆட்சியை தீர்மானிக்கும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்