நாளை தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பணிமனை திறப்பு விழா

தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான மக்கள் பணிமனை 10-03-2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு இல 258, துர்க்கை அம்மன் வீதி, ஆனந்தபுரம் என்ற முகவரியில் திறந்துவைக்கப்படுகிறது.

கட்சியின் செயலாளர் நாயகமும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இந்த பணிமனையை திறந்துவைப்பார். கட்சியின் பல முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று தமிழ் மக்கள் கூட்டணி செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றடுக்கும் வகையில் எமது அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார செயற்பாடுகளில் இணைந்து செயற்படவருமாறு தமிழ் மக்கள் அனைவரையும் அழைப்பதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்